சாலையோர பூங்கா அமைக்கும் பணி நேரில் ஆய்வு

கோவையில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் வளர்ச்சி திட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகிறது. அதனை மாவட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து பின்பற்றி பணியையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில்  இன்று போத்தனூர் ரயில்வே மேம்பாலம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் குழாய் செல்லும் இரும்பு பாலம் அமைக்கும் பணியினையும், தெற்குமண்டல இட்டேரி தெரு சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகத்துடனும் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் ஆய்வு செய்தார். இதில் தெற்குமண்டல உதவி ஆணையர் ரவி கலந்துகொண்டார்.