இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரசு மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் உட்பட கோவையில் மொத்தம் 228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கோவை வைசியாள் வீதியை சேர்ந்த 5 வயது குழந்தை உள்பட 4 பேருக்கும், மாதம்பட்டி செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேருக்கும், எஸ்.எஸ்.குளம் போலீஸ் குடியிருப்பு சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 28 பேருக்கும்,
லட்சுமிபுரம் சின்னசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்த 3 பேர் மற்றும் செல்வபுரம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 228 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 224 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.