3 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள் மற்றும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பமின் வழங்கிய தேன்கூடு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தேன்கூடு அமைப்பின் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள் மற்றும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பமின் ஆகியவை வழங்கப்பட்டது.

இதனை தேன்கூடு நிர்வாக இயக்குநர் மணிவண்ணபிரபு, நீதிபதி பாலசந்தர், இயக்குநர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் வழங்கினார்.