கோவை அரிமா சங்கத்தின் சார்பில் இலவச முகக்கவசம்

கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி1 சார்பாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேரு நகர் மற்றும் காளப்பட்டி அரிமா சங்கத்தினருடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் செந்தில் குமார் தனது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூன்று அடுக்கு கொண்ட இலவச முகக்கவசங்களை வழங்கினார்.
இதற்கான விழாவில் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் நந்தகுமார், ஜெகதீஷ், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் குமார், கொரோனா தடுப்பு பணிக்காக அரிமா சங்கம் தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக தற்போது முகக் கவசங்களை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுப்பு செந்தில் குமார் யுவராஜா, கிருஷ்ணமூர்த்தி, பாலா சுகுமார், செல்வராஜ், கனகராஜ், காளப்பட்டி துரை, திவாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.