அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வேலை இழந்து நிற்கும் சூழலில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் தவணை கட்டக்கோரி  மிரட்டுவதாக மகளிர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில், ராமநாதபுரம் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள் சார்பில் பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ளோம். கொரோனா தாக்குதலால் வேலை இழந்து, வருவாய் இழந்து நிற்கும் சூழலில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் எங்களை தவணை கட்ட சொல்லி தினமும் செல்போன் மூலமும் நேரில் வந்தும் கடுமையாக பேசுகிறார்கள் எனவே இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.