கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை என்ற விழிப்புணர்வு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர நீர், முகக் கவசம் அணியாதவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் கோவை மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினுடைய நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசமும் வழங்கினர்.