கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அம்மன் அர்ஜூனன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், இவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானதையடுத்து கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது மகள் ,மருமகன் ,பேத்தி ஆகியோருக்கு  தொற்று உறுதியாகி அவர்கள் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் 4 பேரும் முழுவதும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஸ் ஆனார்கள். அவரைக் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா வழியனுப்பி வைத்தார்.