கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் பறக்கும் படை

தமிழகம்  முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசு செய்துவருகிறது இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் 20 குழுக்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை உறுதிசெய்தல், வீடுகளில் தனிமைப்படுத்தப்பவர்களை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.” என்று பதிவிட்டிருந்தார்.