வேலாண்டிபாளையம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அறிவுரை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.