திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நல்லறம் அறக்கட்டளை

நல்லறம் அறக்கட்டளை சார்பில் புலியகுளம் விக்னேஷ் மஹாலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பார்வையற்றோருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற 31 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை 100 நபர்களுக்கு அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் வழங்கினார்.

இதில் டாக்டர் விவேக் அன்பரசன், மண்டப உரிமையாளர், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.