கேரளாவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இன்று (13.5.2020) வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், வயநாடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேருக்கும், கோட்டயம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்தும், 2 பேர் சென்னையில் இருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.