இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு 151 லிருந்து 166 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151 லிருந்து 166 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா உறுதியான 166 பேரில் 3 பேர் இறந்த நிலையில் 15 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 42, கேரளாவில் 25, உத்தரப்பிரதேசத்தில் 16, கர்நாடகாவில் 14, பஞ்சாப் 1, பாண்டிச்சேரி 1, ஆந்திர பிரதேசம் 1, ஜம்மு & காஷ்மீர் 4, லடாக் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு பேருக்கு கரோனா உறுதியான நிலையில் ஒரு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.