குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி என 25ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. மேலும் தண்டனை விவரம் இன்று (28.8.17) அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில் நீதிபதி ஜெகதீஷ் சிங், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அறிவித்தார்.

இந்நிலையில் நீதிபதியிடம் குர்மீத் ராம் ரஹீம் சிங் தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் அடைக்கப்பட்டிருந்த ரோதக் சோனாரியா சிறை சாலைகே நீதிபதி ஹெலிகாப்டர் மூலம் வந்து இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.