பிளாஸ்டிக்  விழிப்புணர்வு பேரணி

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. ஆகையால் மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க தூய்மை இந்தியா திட்டம் மூலம்  பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி  கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. பேரணியை கோவை பாராளுமன்ற உறுப்பினர் எ.பி.நாகராஜ் துவக்கி வைத்தார். இதில் 2000க்கும் மேற்ப்பட்ட  மாணவிகள் பங்கேற்றன. கையில் நெகிழி பயன்படுத்தாதே, மஞ்சப்பை பயன்படுத்து என்ற வாசகங்கள் அமைய பெற்ற பதாகைகள் ஏந்தி சென்றனர்.