சி சி டி வி கேமராக்களின் தொடக்க விழா

கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக 50 சி சி டி வி கேமராக்களின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண், காவல் ஆய்வாளர்கள், காவல் துறை துணை ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பு மையத்தை ஆணையாளர் துவக்கி வைத்தார். பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலமாக குற்றங்கள் கண்டுபிடிக்க ஏதுவாக உள்ளதாகவும், சி சி டி வி கேமராக்கள் குற்றங்களை குறைக்க உதவுவதாக கூறினார். மேலும், கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் உதவியுடன்  சி சி டி வி கேமராக்கள் பொருத்துவதற்கு துணை ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.