டெங்கு தடுப்பு தினம்

டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் டெங்கு தடுப்புதின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட நேர்முக உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.