தீபாவளி சமயத்தில் இரவு 8 முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகள் வருமாறு:-

ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

* தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாட்களில் நாடு முழுக்க இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

* லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்.

* குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

* அதிகளவிலான சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.

* மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

*  ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது.

* புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் அன்று இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.