குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் இதய நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் இதயம் சார்ந்த நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதய நோய் மருத்துவ நிபுணர்களான, முரளிதரன் , சந்திரசேகர், சுந்தர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு இதயம் சார்ந்த நோய்கள் தொடர்பாக மக்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். மேலும் நவீன மாற்றங்களால் உணவு முறைகளில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்த்து சத்தான உணவை உட்கொண்டால் நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம் என தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.