வி எல் பி ஜானகியம்மாள் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்தனர்.

கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் உள்ள, என்.எஸ்.எஸ்  மாணவர்கள் மதுக்கரை ரயில்நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மதுக்கரை ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தூய்மை பணிகள் நடைபெற்றது. ரயில் நிலையத்தில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி சுத்தம் செய்தனர்.