திருப்பூரில் துணை கலெக்டர்கள் திடீர் மாற்றம்.

தமிழகத்தில் துணை கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக இருந்த ரவிச்சந்திரன் சேலம் தனித்துணை கலெக்டராக (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கலால் மேற்பார்வையாளராக இருந்த கணேஷ் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காமராஜ் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக விழுப்புரம் ஆர்.டி.ஓ.வாக இருந்த ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலால் உதவி ஆணையாளராக இருந்த செல்வி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கொச்சின் சேலம் பைப்லைன் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த செந்தில் அரசன் தாராபுரம் ஆர்.டி.ஓ. வாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக இருந்த அம்பாயிரநாதன் சேலம்ஆர்.டி.ஓ.வாக மாற்றப்பட்டுள்ளார்.