பொள்ளாட்சியில் மூதாட்டி இடம் செயின் பறிப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்தார்.

அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2 ½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.