தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.