ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியர் தின விழா வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில் ஆர்.வி.எஸ். நிறுவனங்களின் செயலாளர் சாரம்மா சாமுவேல் கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார். மேலும், மருத்துவமனையில் நோயாளிகளின் பராமரிப்பிலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்ட செவிலியர்களுக்கு, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் சான்றிதழ்களும், பரிசுகளையும் வழங்கினார்.