கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம்

தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இந்த முகாமில் ஐடி, உற்பத்தி, கட்டுமானம் மற்றும் முக்கிய பொறியியல் நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 22 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன, இதில் அருகில் உள்ள பகுதியை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொறியியல் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறுவதற்கு உதவியாக இருந்தது. இறுதியில் நேர்காணல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.