தீவிரவாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பயிற்சிகளையும் வழங்கினார். இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது எவ்வாறு கையாளுவது போன்ற அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.