கே.ஐ.டி கல்லூரியில் சர்வதேச மாநாடு

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கே.ஐ.டி) சார்பில் “7வது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடு (ICSTEM’23) தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் ஸ்ரீனிவாசன், பெங்களூரு சி.டி.ஏ.சி-யின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் மற்றும் திருச்சிராப்பள்ளி, ஐஐஐடி-யின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் தனலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்துமுருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வர் ரமேஷ், துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.