பெண் காவலருக்கு பாராட்டு

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது, அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் இந்துமதி சிவாவை விரட்டிப் பிடித்தார். இந்த செயலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டி பெண் தலைமை காவலருக்கு ரூ.5000  வெகுமதி வழங்கினார்.