கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கோவை அவினாசி சாலையில் உள்ள மீனாட்சி மகாலில் இந்திய மற்றும் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் மற்றும் ஆம் எஜுகேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட், ஆகியோர் இணைந்து ‘காந்தி சில்ப் பஜார்’ எனும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி அண்மையில் துவங்கியது. இந்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியை ரொனால்ட் செல்விஸ்டின், மரியா டொமினிக் சேவியோ, தனராஜன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் ஜவுளிப் பொருட்கள், ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், அரிய வகை கற்கள், தஞ்சை ஓவியங்கள், மரச் சிற்பங்கள் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரம் சிங் மற்றும் முகம்மது தபிரேஜ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.