கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு

கோவை கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அன்று மாணவர்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் சிவகாமி கனகசபாபதி நவீன காசநோய் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, கோவை மெடிக்கல் கல்லூரி சமூக சுகாதார மருத்துவ துறை பேராசிியர் டாக்டர் ஜீவிதன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளநிலை இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு செவிலிய மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.