கே.எம்.சி.ஹெச் கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களுக்கு உலக நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் மாதவி தலைமையுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் சங்கம் (கோவை) பொது செயலாளர் பிரதீப்குமார், நுகர்வோர் தகவலை பற்றி அறியும் உரிமை, பாதுகாப்பு உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலை செவிலியர் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.