முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதுமலை தம்பதி!

95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்க்கான விருது வென்ற ‘The Elephant Whisperers’ படத்தில் நடித்த முதுமலை தம்பதி பொம்மன் – பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதிகளால் வளர்க்கப்பட்ட யானைகள் குறித்த ஆவண குறும்படத்தை குனெட் மொன்கோ தயாரிப்பில் கார்த்திக்கி குன்செல்வெஸ் இயக்கினார். முதல் முதலில் இந்திய தயாரிப்பில் ஆஸ்கர் வென்ற படம் என்ற பெருமையை ‘The Elephant Whisperesrs’ பெற்றுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், முதுமலையில் இருந்து மைசூரு வழியாக பெள்ளியை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதேபோல் தாய் யானைகளை இழந்த குட்டி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக சென்ற பாகன் பொம்மன், தருமபுரியில் இருந்து சென்னைக்கு வரப்பட்டார். இவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தம்பதியைப் பாராட்டி தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர்.