மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம்

கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்லூரி கல்விக் கடன் உதவி வழங்க மாபெரும் கல்விக் கடன் முகாம் செவ்வாய் அன்று ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்ப முகாமினை துவக்கி வைத்தார்.