கோவை அஜனுர் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாரதிய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து உரையாற்றினார்.
பள்ளியின் முதல்வர் ஜெயலதா வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.