கவுண்டம்பாளையத்தில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸகூட்டர் விற்பனை மையம் திறப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் புதிய ஆனைமலைஸ் ஏத்தர் எலக்ட்ரிக் ஸகூட்டர் விற்பனை மையம் துவங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஆனைமலைஸ் புதிய ஏத்தர் ஷோரூமுடன் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கியது.

புதிய ஷோரூமை குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் விக்னேஸ்வர் துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் குழும டைரக்டர் சித்தார்த், ஏத்தர் நிறுவனத்தின் டெரிட்டரி சேல்ஸ் மேனேஜர் அமணிஷ், ஏத்தர் நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேனேஜர், ஸ்ரீகர் பட்டில் மற்றும் ஆனைமலைஸ் குழும நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.