மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ: தீயை அணைக்கும் பணி தீவிரம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுதீ ஏற்பட்டுள்ளது. மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்க 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர்.