செந்தில்குமாருக்கு சிறந்த மக்கள் தொடர்பாளர் விருது

பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் 324 சி சார்பில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று முறையாக மக்கள் தொடர்பு பணியை சிறப்பாக செய்ததற்கும், பல்லடம் ஆரா குளத்தில் லயன்ஸ் இயக்கத்தின் சார்பில் கட்டி வரும் சுமார் 40,000 ஸ்கொயர் ஃபீட் பள்ளி கட்டிட அனுமதி பெற்றுத்  தந்தமைக்காகவும் மக்கள் தொடர்பாளர் செந்தில்குமாருக்கு சிறந்த மக்கள் தொடர்பாளர் (PRO) விருது வழங்கப்பட்டது.

இதனை மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

உடன், முதலாம் துணை ஆளுநர் ஜெயசேகரன், இரண்டாம் துணை ஆளுநர் நித்தியானந்தம், சேவை திட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் சுப்ரமணியம், பொருளாளர் செயல் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.