வெற்றியை கொண்டாடும் மன நிலையில் இல்லை – காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குகளை எண்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 % நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் எடுத்துக்காட்டு. இது பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன் எனக் கூறினார்.