கராத்தே போட்டியில் எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர் சாதனை

உத்தராகாண்ட், டெஹ்ராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இ.சி.இ பயிலும் மாணவர் நாகேந்திரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

போட்டியில், 32 மாநிலங்களில் இருந்து சுமார் 600 பேர் பங்கேற்றனர். இதில் 21 வயதுக்குட்பட்ட பிரிவில் பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர், 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் குமித்தே 84 கிலோ பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.