கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பள்ளிகளுக்கிடையேயான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு, அன்னூர் காட்டம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுடன் அரையிறுதிப் போட்டியில் போட்டியிட்டு, 10 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் 81 ரன்கள் எடுத்த அப்பள்ளி மாணவர்களை எதிர்த்து, 10 ஓவர்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
அதனை தொடர்ந்து இறுதிப்போட்டியில் கோவை ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு, 10 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில 74 ரன்கள் எடுத்து வெற்றியை தழுவி முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்றனர்.