ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் வினாடி வினா போட்டி

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆதித்யா இன்ஃபோமிண்ட்ஸ் 2023” என்ற தலைப்பில் மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் சிஎஸ் அகாடமி, ரத்தினம் பள்ளி, ஸ்டேன்ஸ் பள்ளி, வித்யா நிகேதன் பள்ளி, சிஎம்எஸ் பள்ளி, ஆர்.கே.வி பள்ளி, ஆர்.வி.எஸ் பள்ளி, ஆர்.ஜே பள்ளி, சின்மியா பள்ளி, ஆசிரம் பள்ளி, பர்க்ஸ் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, எஸ்.எச்.எஸ்.எஸ் பள்ளி, எஸ்.இ.எஸ் பள்ளி போன்ற 46 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக 5672 மாணவர்கள் முதல்நிலை சுற்றுகளில் பங்கேற்றனர். அதிலிருந்து கால் இறுதிக்கு 360 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து ஆர்ஜே, சிஎஸ், செயின்ட் ஆன்ஸ், ரத்தினம், சிஎம்எஸ், எஸ்இஎஸ் மற்றும் ஸ்டன்ஸ் பள்ளி ஆகிய அணிகள் இறுதி சுற்றுகளுக்கு தகுதி பெற்றன.

ஆர்.ஜே மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை வென்று ரூ. 25,000, சிஎஸ் அகாடமி மற்றும் ரத்தினம் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை வென்று ரூ. 15,000, செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தை வென்று ரூ.10,000 ரொக்கப் பரிசையும், கோப்பையும் வென்றனர். மேலும் செயின்ட் ஏஞ்சலோ இந்தியன் பள்ளி, சிஎம்எஸ் பள்ளி, எஸ்.இ.எஸ் பள்ளிகள் சிறப்புப் பரிசாக ரூ.5,000 வென்றனர்.

கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் மற்றும் துறைத்தலைவர்கள் அனைவரும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.