ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு மாநில அளவிலான விருதுகள்

புதுதில்லியில் உள்ள இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஐ.எஸ்.டி.இ) அமைப்பானது, மாநில அளவிலான சிறந்த மாணவர் மற்றும் மாணவியருக்கான விருதினை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ளது

மாணவர்களின் கல்வி மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் முழுமையான செயல்திறனின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான சிறந்த மாணவர் விருதினை இவ்வமைப்பு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்வாண்டிற்கான ஐ.எஸ்.டி.இ அமைப்பின் பத்தாவது மாநில மாணவர் மாநாடு பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

இம்மாநாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேஷன் துறை மாணவர் சூர்யகாந்த் மற்றும் இறுதியாண்டு கணிப்பொறி துறை மாணவி தேன்மொழி ஆகியோர் சிறந்த மாணவ, மாணவியர் விருதினை பெற்றனர்.

விருது பெற்ற இம்மாணவர்களை எஸ்.என்.ஆர் சன்ஸ்.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணஸ்வாமி, கல்லூரி முதல்வர் உமா ஆகியோர் பாராட்டினர்.