என்.ஜி.பி கல்லூரியில் வணிக கண்காட்சி

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், வணிக மேலாண்மைத் துறையின் சார்பில் தொழில் தொடங்குவதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் “என்ஜிபி எக்ஸ்போ” என்ற நிகழ்வினை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் கல்லூரியின் செயலர் தவமணி தேவி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட வணிக ரீதியிலான அரங்குகள் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் அவர்கள், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், சந்தைபடுத்துவதற்கான உத்திகள், விற்பனை திறன்கள், வணிக நுட்பங்கள், சந்தை பகுப்பாய்வு, சந்தை போட்டி திறன்கள், தலைமைப்பண்பு வளர்த்துக்கொள்ளுதல், குழுவாக ஒருங்கிணைந்து செயலாற்றும் தன்மைகள் குறித்த பல்வேறு பயன்களை பெற்றனர்.