எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளியின் ஆண்டு விழா

கோவை எஸ்.என்.எஸ் அகாடமி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ ஃபிங்கர்ப்ரிண்ட் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை அன்று சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ் கலை கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கீர்த்திலால் காளிதாஸ் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெடின் இயக்குனர் பிஸ்னஸ் ஸ்டேடர்ஜி, சூரஜ் சாந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.