ஆர்.வி கல்லூரியில் கருத்தரங்கம்

டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் நிஷா அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

கோவை, சீட்டெல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டு விரிவுரையாளர் சபரி பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் பேசிய உரையில், வெவ்வேறு மொழிகளில் பயன்படக்கூடிய மென்பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், வாழ்க்கை சுழற்சியில் நம் திட்டங்களை மேம்படுத்துவதற்கான மென்பொருள், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள், வலைப்பதிவு மற்றும் வலைத்தளப் பயன்பாடுகள், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.