ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகள் விளையாட்டில் சாதனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளனர். இந்திய தங்-டா கூட்டமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற 28-வது தேசிய தங்-டா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் சுற்றில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் இரண்டாவது சுற்றில் மகாராஷ்டிராவுடன் போட்டியிட்டு, மாணவி மிருதுளா, 52 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

போதையில்லா கோயம்புத்தூர் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட நம்ம கோவை மாரத்தானில் சிமாயா பங்கேற்று 5 கிலோ மீட்டர் பொதுப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில்: எங்கள் கல்லூரி மாணவிகள் ஆர்வம், மன உறுதி, கடின உழைப்பு, மற்றும் விடாமுயற்சியால் பல சாதனைகள் புரிந்து எங்கள் கல்லூரியின் ரத்தினங்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்று பாராட்டினார்.