கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்ப சந்திப்பு (டெக் பிளாஸ்ட் 23) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சென்னை, பிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், துணைத் தலைவர் ஷேன் சசிதரன் மற்றும் பெங்களூர், இன்போர் நிறுவனர் புவனேஷ்வரி சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் ஷேன் சசிதரன் தமது உரையில், மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும், மற்றும் தொழில் முனைவோராக மாறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
புவனேஷ்வரி சுப்ரமணியம் தமது உரையில், மாணவர்கள் மொழித்திறனையும், பேச்சுத்திறனையும் வளர்த்துக்கொள்வதன் வழியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
50 க்கு மேற்பட்ட கல்லுரிகளிலிருந்து 1000 க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்தனர். அனைத்து நிகழ்வுகளிலும் சிறப்பாக பங்கேற்றமைக்காக செம்பியன் விருது எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.