குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிக்கு பாராட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி அபர்ணா அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற 74 வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் சார்பாக இந்த அணிவகுப்பில் மாணவி அபர்ணா கலந்து கொண்டதையொட்டிக் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பேசுகையில்: ஆர்வமும் முயற்சியும் இருந்தால் மாணவிகள் சிகரங்களைத் தொடமுடியும். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாது பயன்படுத்திக் கொண்டு நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாணவி அபர்ணாவை பாராட்டினார்.

விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுபாஷினி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.