தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் குண்டூர் ஆச்சார்யா என். ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் குண்டூர் என்.ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகம் பதிவாளர் ராமா ராவ் ஆகியோர் மாணவர்களின் நலனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, என். ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் விஷ்ணுவர்தன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.