ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் க்வாட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் க்வாட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் சுப்ரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும். வேலை வாய்ப்புக்குத் தேவையான திறன்களையும் பயிற்சிகளையும் கல்லூரி மாணவியர் பெற முடியும் என்று கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்தார்.