மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!

சங்குப் பூ என்பது காக்கட்டான் மலரை நாம் வெளிபுற தோட்டங்களில் பார்த்திருப்போம்.  இது கண்கவர் நீல நிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது.

வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில்  ஒன்றாகும். இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும்.

இந்த மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது.

சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது.

தாய்லாந்து, சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் நட்சத்திர உணவகங்களில் ராயல் உணவுவகைகளில் இந்த மலர் சேர்க்கப்படுகிறது. தாய்லாந்தில் அஞ்சான் மலர் என்றும் ஆங்கிலத்தில் பட்டர்ஃபளை பீ ஃப்ளவர் (Butterfly Pea Flower) என்றும்  அழைக்கப்படுகின்றன.